தென்னிந்தியாவின் மிகப்பெரிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை இலியானா. கமெர்ஷியல் குயினாகவும், சிறந்த நடிகையாகவும் பெயர் பெற்றவர் இவர்.
குறிப்பாக, பாலிவுட்டில் இவர் நடித்த பர்பி திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அனைவரும் இலியானாவின் நடிப்பால் பிரமித்துப் போனார்கள்.
இந்நிலையில் நடிகை இலியான தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு பேசிய போது, நான் body dysmorphic disorder பிரச்சனையால் மன உளைச்சலுடன் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறேன்.
மற்றவர்களுக்கு பிடித்தவாறு நடந்து கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்கிறேன். நான் சினிமாவில் 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன்.
ஆனால், அது எனது திட்டமாக இல்லை. பருவம் எய்திய பின் நான் மிகவும் வெட்கப்படுபவளாகவும், சுய உணர்வுடைய பெண்ணாகவும் இருந்தேன். எனது உடல் அமைப்பைக் குறித்து தொடர்ந்து கவலைப்பட்டேன்.
என்னுடைய 15 வயதின் போது நான் இந்த தொல்லையால் பாதிக்கப்பட ஆரம்பித்தேன். நான் body dysmorphic disorder பிரச்சனையில் இருப்பதை உணரவே இல்லை. மூன்று வருடங்களுக்கு முன்பு, நான் உச்சக்கட்ட மன அழுத்தத்தில் இருந்தேன்.
இதைத் தொடர்ந்து பேசிய அவர் எந்த ஒரு பிரச்சனைக்கு தீர்வு உண்டு எனவும், எதுவாக இருப்பினும் அதை தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும், அதுவே ஒரு முன்னேற்றம் தான் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment