ராதிகா ஆப்தே தான் நடித்து வரும் ஹாலிவுட் படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்துள்ளார். நிர்வாண காட்சியை மீடியா தான் ஊதி பெரிதாக்குகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
தோனி படம் மூலம் கோலிவுட் வந்தவர் நடிகை ராதிகா ஆப்தே. அவர் தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் அவரது இந்தி படம் ஒன்று ரிலீஸாகும் முன்பு அவரின் நிர்வாண செல்ஃபீக்கள் வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவியது. ராதிகாவோ அந்த செல்ஃபீக்களில் இருப்பது தான் அல்ல என்று தெரிவித்தார். நிர்வாண செல்ஃபீக்களில் இருப்பது ராதிகா ஆப்தே தான் என்று சினிமா வட்டார சகாக்களால் கூறப்படுகிறது.
ராதிகா ஆப்தே ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்து வருகிறார். அந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் அவர் நிர்வாணமாக நடித்துள்ளார். அவருக்கு முன்பே சில இந்திய நடிகைகள் ஹாலிவுட் படங்களில் நிர்வாணமாக நடித்துள்ளனர்.
நிர்வாணமாக நடிப்பதில் தனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும், இதை மீடியா தான் ஊதி பெரிதாக்குவதாகவும் ராதிகா தெரிவித்துள்ளார். அவரே விரும்பி நிர்வாணமாக நடித்துவிட்டு அதை மீடியா பெரிதாக்குவதாக பழியை தூக்கி பத்திரிக்கையாளர்கள் மீது போட்டுள்ளார்.
நான் நடித்து வரும் ஹாலிவுட் படம் இந்தியாவில் ரிலீஸானால் அந்த நிர்வாண காட்சியை நீக்கிவிட்டு வெளியிடுவார்கள் என்று கூறியுள்ளார் ராதிகா. செக்ஸ் வைத்துக் கொள்வதில், அதை பற்றி பேசுவதில் தவறு எதுவும் கிடையாது. இங்கு தான் அதை பற்றி பேசக் கூடாது என்று உள்ளது என்கிறார் ராதிகா ஆப்தே.
ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ஃப்ரீடா பின்டோ ஹாலிவுட் சென்றார். அங்கு அவர் ஒரு படத்தில் நிர்வாணமாக படுக்கையறை காட்சியில் நடித்திருந்தார். அதை ஒன்றும் மீடியா ஊதி பெரிதாக்கவில்லையே. தான் நடித்துள்ள நிர்வாண காட்சி பற்றி அனைவருக்கும் தெரிய வேண்டும் என ஒருவேளை ராதிகாவே தெரிவித்திருக்கலாம் எனக்கூறப்படுகின்றது.

No comments:
Post a Comment