Search This Blog

Monday, October 9, 2017

குழந்தை இல்லாமல் கருத்தரிக்காமல போவதற்கு காரணம் என்ன தெரியுமா?...



இன்றும் சரி, அன்றும் சரி… திருமணமான தம்பதிகளுக்கு அவர்களுடைய குடும்பங்கள் கொடுக்கும் அதிகப்படியான அவகாசம் மூன்று மாதங்கள்தான். அதன் பிறகு ‘இன்னும் உண்டாகலையா..?’ என்கிற கேள்விகளால் அந்தத் தம்பதியை அரித்தெடுக்கத் தொடங்கி விடுகிறார்கள். 

அதிலும் ஆண் இந்த விஷயத்திலிருந்து பெரும்பாலும் தப்பிவிடுவார். அவரிடம் இந்தக் கேள்வி பெரும்பாலும் நேரிடையாகக் கேட்கப்படுவதில்லை. பெண்கள்தான் மொத்தத் தாக்குதலுக்கும் ஆளாகிறார்கள். கொஞ்ச நாட்களிலேயே அவளுக்கு சமூகம் ‘மலடி’ என்கிற ஒரு பட்டத்தையும் வழங்கிவிடுகிறது.



தம்பதிகள் இருவரும் சரியானபடி, சரியான நேரத்தில் உறவு வைத்துக் கொள்ளாமல் இருந்திருக்கலாம். அல்லது அவர்கள் சரியானபடி டீரிட்மெண்ட் எடுத்துக் கொள்ளாமல் இருந்திருக்கலாம். அதனால்தான் குழந்தை உண்டாகாமல் இருந்திருக்கலாமே ஒழிய, மலட்டுத் தன்மை (Infertility) என்பது பெண்ணில் கிடையாது. அவர்களில் subfertile, அதாவது வளர்ச்சி குறைந்த நிலைதான் ஏற்பட்டிருக்கலாமே ஒழிய வேறு காரணங்கள் இருப்பதற்குச் சாத்தியமில்லை.

திருமணமான தம்பதிகளில் நூறில் இருபது பேருக்குக் குழந்தை பிறப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இவர்களில் 35 _40% வரைதான் பெண்கள் காரணமாகிறார்கள். பத்து வருடங்களுக்கு முன் 20-25% வரை தான் ஆண்கள் காரணமாக இருந்தார்கள். ஆனால் இன்று 40% வரைக்கும் குழந்தையில்லா பிரச்னைக்கு ஆண்கள்தான் காரணமாக இருக்கின்றனர். 15-20% வரை பிரச்னைக்குக் காரணம் யாரென்றே தெரியாமல் போகலாம். இந்த சந்தர்ப்பத்தில் தம்பதிகள் இருவருமே நார்மலாக இருந்தாலும் அவர்களுக்கு எந்தக் காரணத்தினாலோ குழந்தை பிறக்காமலேயே போகும்.

ஒவ்வொரு தம்பதிக்கும் அவரவர் சூழல் வேறுபடும். சிலர் முப்பது வயதுபோல திருமணம் முடித்திருக்கலாம். இவர்களுக்கு குழந்தை விஷயம் தள்ளிப்போனால் இரண்டு மூன்று வருடம் வரையெல்லாம் காத்திருக்க முடியாது. இது உடனே கவனிக்கப்படவேண்டிய விஷயமாகிவிடும்.

பொதுவாக டிரீட்மெண்டுக்கு வரும் குழந்தையில்லாத் தம்பதிகளில், நூறு பேரில் எண்பத்தைந்து சதவீதம் பேர் வரை எந்த விதமான மருந்து மாத்திரைகளையும் பயன்படுத்தாமலேயே கருதரித்து விடுவார்கள்.

முட்டை வெளிப்படும் OVULATION PERIOD தான் உறவுக்கு உகந்த சமயம். அந்தச் சமயத்தில் உறவு கொண்டால்தான் கருதரிப்பு ஏற்படும் என்று சொல்லி இருக்கிறேன். அந்த தேதிகளை தவற விடும்போது சில தம்பதிகளுக்குக் கருதரிக்காமல் போகலாம்.

கணவனும் மனைவியும் வேலை பார்க்கும் குடும்பங்களிலும், இருவரில் யாரேனும் அடிக்கடி வெளியூருக்கு டூர் போகும் குடும்பங்களிலும் இவ்வாறு ஆகலாம்.

சிலருக்கு அல்லது தம்பதியர் இருவருக்குமே நடந்தது இரண்டாம் திருமணமாக இருக்கலாம்.



அவர்களில் கணவர் ஏற்கனவே குழந்தை பெற்றவராக இருந்தாலும் முன்பிருந்த உடல்நிலை போல அவருக்கு இப்போது இல்லாமல் போகலாம். அதுவும்கூட கருதரிக்காமல் போகக் காரணமாகும் என்பதால், இந்தத் தகவலையும் மறைக்காமல் மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும்.

சில நேரங்களில் குழந்தை இல்லையா என்ற சமூகத்தின் கேள்வியை கூடத் தம்பதிகள் மனதில் ஒருவித பாதிப்பு ஏற்படுத்தி, கருத்தரிப்பு உண்டாவதில் பிரச்னைகள் ஏற்படுத்தலாம்.

அதுபோன்ற சூழலில் தம்பதியரின் நெருக்கம் சற்றே குறைய வாய்ப்புள்ளது. அதனாலும் குழந்தைபேறு தள்ளிப் போகலாம். சிலர் அந்த உறவு முடிந்தவுடன் சுத்தமாக இருக்கிறேன் பேர்வழியே என்று, தங்கள் அந்தரங்க பாகங்களை தண்ணீராலோ வேறு கெமிக்கல் திரவத்தாலோ சுத்தப்படுத்தி வரலாம். இப்படி செய்யும்போது விந்தணு அழிந்துபோகும் வாய்ப்புள்ளது. இதனாலும் கருதரிப்பு தள்ளிப் போகலாம்.

இதுபோன்ற பல காரணங்களினால் உடலளவில் பிரச்னைகள் இல்லாத தம்பதிகளுக்கும் கூட கருத்தரிப்பதில் பிரச்னைகள் உண்டாகலாம். மருத்துவரிடம் இது பற்றி ஒளிவு மறைவில்லாமல் பேசி பிரச்னைக்கு உடனடித் தீர்வு காணலாம்.

No comments:

Post a Comment

அதிகாலையில் உறவு கொள்வதுதான் பிடிக்குமா?… அப்போ இதையும் சேர்த்து ட்ரை பண்ணுங்க!!

ஆண்கள் பொதுவாக காலையில் எழுந்திருக்கும் போதுதான் அதிக உணர்ச்சிப் பெருக்கில் இருப்பார்கள். அதிலும் அழகிய காதலி அவருடைய அருகில் இருந்தா...