கொழும்பு மாளிகாவத்தையில் ஹட்டன் பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவியொருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவியின் தாயார் வெளிநாட்டில் இருப்பதால் மாளிகாவத்தையில் வசிக்கும் தனது மூத்த சகோதரியின் வீட்டில் தங்கியிருந்த நிலையில் அவரை பாட்டனார் மற்றும் மைத்துனர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தினர் என மாணவியின் பாட்டி பொலிசில் முறைபாடு செய்துள்ளார்.
15 வயதான இந்த சிறுமியின் தந்தை, பாட்டனார், மைத்துனர் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். மாணவியை உடற் பரிசோதனைக்கு உட்படுத்தி விசாரணைகளை ஆரம்பிக்க பொலிசார் தீர்மானித்துள்ளனர்.

No comments:
Post a Comment